செய்தி விளையாட்டு

INDvsENG – இந்திய அணிக்கு 172 ஓட்டங்கள் இலக்கு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக ஷமி இடம்பிடித்துள்ளார்.

அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. பிலிப் சால்ட் 5 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய ஜாஸ் பட்லர் பென் டக்கெட்டுடன் இணைந்தார். இந்த ஜோடி அதிரடியில் மிரட்டியது.

குறிப்பாக பென் டக்கெட் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 28 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 51 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

ஜாஸ் பட்லர் 24 ரன்னில் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 76 ரன்கள் சேர்த்தது.

கடைசி கட்டத்தில் லிவிங்ஸ்டன் அதிரடியாக ஆடி 5 சிக்சர் உள்பட 43 ரன்கள் குவித்தார்.

இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 171 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டும், பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி