செய்தி விளையாட்டு

INDvsENG – முதல் இன்னிங்சில் 587 ஓட்டங்கள் குவித்த இந்தியா

இங்கிலாந்து – இந்தியா அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது.

இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தி 269 ரன்களில் வெளியேறினார்.

இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் பஷீர் 3 விக்கெட்டும் கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content