INDvsENG – நான்காம் நாள் முடிவில் 21 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
இதனையடுத்து 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 96 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய 364 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 371 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை”நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 4வது நாள் முடிவில் 6 ஓவர்களில் 21 ரன்கள் அடித்துள்ளது.
இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 351 ரன்கள் அடிக்க வேண்டும். இந்தியா வெற்றிபெற 10 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.இத்தகைய பரபரப்பான சூழலில்”நாளை கடைசி நாள் ஆட்டம்”நடைபெற உள்ளது