செய்தி விளையாட்டு

INDvsAUS – ஆஸ்திரேலிய பந்துவீச்சில் தடுமாறும் இந்திய அணி

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 86 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய 157 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்- கேஎல் ராகுல் களமிறங்கினர். கேஎல் ராகுல் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து ஜெய்ஸ்வால் 24, விராட் கோலி 11, சுப்மன் கில் 28, ரோகித் சர்மா 6 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ரிஷப் பண்ட் 28 ரன்களுடனும் நிதிஷ் 15 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ், போலண்ட் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

(Visited 11 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி