செய்தி விளையாட்டு

T20 கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்த இந்தோனேசிய வீராங்கனை

மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது.

இதன் 5-வது ஆட்டம் பாலியில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இந்தோனேசியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய மங்கோலியா 16.4 ஓவர்களில் வெறும் 24 ரன்னில் சுருண்டது.

இதனால் இந்தோனேசியா 127 ரன்கள் வித்தியாசத்தில் தொடர்ந்து 5-வது வெற்றியை ருசித்தது.

அறிமுக வீராங்கனையாக அடியெடுத்து வைத்த இந்தோனேசியா சுழற்பந்து வீச்சாளர் 17 வயதான ரொமாலியா, 3.2 ஓவர் பந்து வீசி 3 மெய்டனுடன் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை பெற்றுள்ளார்.

சர்வதேச பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு வீராங்கனையின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

இதற்கு முன்பு நெதர்லாந்தின் பிரடெரிக் ஒவர்டிக் 2021-ம் ஆண்டில் பிரான்சுக்கு எதிராக 3 ரன்னுக்கு 7 விக்கெட் எடுத்ததே சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

இதைத் தொடர்ந்து நடந்த கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்தோனேசியா அபார வெற்றி பெற்றது. இதில் மங்கோலியா நிர்ணயித்த 52 ரன் இலக்கை இந்தோனேசியா 9.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்தது.

(Visited 21 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி