இந்தியா செய்தி

எரிபொருள் கசிவால் வாரணாசியில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்

கொல்கத்தாவிலிருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற இண்டிகோ (IndiGo) விமானம், எரிபொருள் கசிவைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் (Varanasi) உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் (Bahadur Shastri International Airport) அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த 166 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், “தேவையான சோதனைகளுக்காக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது, பயணத்தைத் தொடர மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது, வழக்கமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!