பறவை மோதியதால் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்
216 பயணிகளுடன் பெங்களூரு(Bengaluru) சென்ற இண்டிகோ(IndiGo) ஏர்லைன்ஸ் விமானம் பறவை மோதியதைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி(Lal Bahadur Shastri) சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் இருந்த 216 பயணிகளும் விமானம் தரையிறங்கிய பிறகு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிலைய இயக்குநர் புனீத் குப்தா(Puneet Gupta) குறிப்பிட்டுள்ளார்.
கோரக்பூரிலிருந்து(Gorakhpur) பெங்களூரு செல்லும் வழியில் 6E 437 என்ற விமானத்தில் பறவை மோதியதால் அதன் முன் பகுதி சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு விமானி உடனடியாக வாரணாசி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைத் தொடர்பு கொண்டு விமானத்தை வாரணாசி(Varanasi) விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





