இந்தியா

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் ‘பிஎஸ்எல்வி சி-59’ ஏவுகணை

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ‘ப்ரோபா-3’ எனும் இரட்டை செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் PSLV-C59 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(இஸ்ரோ) ஓா் அங்கமான ‘நியூஸ்பேஸ் இந்தியா லிமிட்டெட்’ அமைப்பு மூலம் வெளிநாட்டுச் செயற்கைக்கோள்கள் வா்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை (டிசம்பர் 4) மாலை 4.08 மணிக்கு ‘பிஎஸ்எல்வி சி-59’ ஏவுகணை விண்ணில் பாய்ச்சப்படவிருந்தது.

இறுதிக் கட்ட சோதனைகளில், ‘ப்ரோபா-3’ செயற்கைக்கோள்களில் சில தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.அதைத் தொடர்ந்து, ஏவுகணையைப் பாய்ச்சும் நடவடிக்கை வியாழக்கிழமை (டிசம்பர் 5) மாலை 4.04 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ‘ப்ரோபா-3’ இரட்டை செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் ‘பிஎஸ்எல்வி சி-59’ ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.இதுவரை 430க்கும் மேற்பட்ட வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களை ‘நியூஸ்பேஸ்’ நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

பெரும்பாலான உலக நாடுகளின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்கு இஸ்ரோ பங்களித்து வரும் நிலையில், அண்மையில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் (ESA) ‘நியூஸ்பேஸ் இந்தியா’ நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டது. அந்த வகையில், ‘ESA’ நிறுவனத்தின் இரு ‘ப்ரோபா-3’ செயற்கைக்கோள்களை ‘பிஎஸ்எல்வி சி-59’ ஏவுகணை மூலம் புவியிலிருந்து 60,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி, சூரியனின் புறவெளிக் கதிர்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.

இரு செயற்கைக்கோள்களும் 150 மீட்டா் தொலைவில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளியைச் சுற்றி ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு தரவுகளைக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!