இலங்கை

இந்தியாவின் கட்டண முறை இலங்கையிலும் அறிமுகம்!

இந்தியாவின் PhonePe டிஜிட்டல் கட்டண முறை நேற்று (15.05) கொழும்பில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் தலைமையில் நடைபெற்றது.

இந்த அமைப்பின் மூலம் இந்திய சுற்றுலா பயணிகள் பணமில்லா பரிவர்த்தனை செய்யலாம்.

இதன்போது உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா, “உங்களில் பலருக்குத் தெரியும், இந்தியா இலங்கையின் முன்னணி பொருளாதாரப் பங்காளியாகும்.

நாங்கள் இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், அண்மைக் காலத்தில் இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலமாகவும் இருக்கிறோம்.

மேலும், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவருவதில் இந்தியா பங்களித்துள்ளது.

இலங்கைக்கு மேலும், UPI, QR கட்டண முறையின் அறிமுகம் மூலம், இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், நாட்டில் முதலீடுகளை அதிகரிப்பதற்கு உதவும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!