ஐரோப்பிய நாடுகளை நோக்கி நகரும் இந்தியர்கள் – அயர்லாந்தில் குவியும் விண்ணப்பங்கள்
கடந்த பத்தாண்டுகளில் அயர்லாந்தில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளது.
அயர்லாந்திற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்று ஆலோசகர் அனிதா கெல்லி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டு 800 என காணப்பட்ட இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்து 2022ஆம் ஆண்டு 7,000-ஐத் தொட்டதாக கெல்லி கூறினார்.
ஆனால், பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் இந்த ஆண்டு மாணவர் விண்ணப்பம் மற்றும் ஏற்பு அதிகரிப்பைக் கண்டுள்ளன.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை NMIMS இன் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி மற்றும் ஷானோன் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி இடையே இரட்டை பட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவுக்கான அயர்லாந்தின் தூதர் கெவின் கெல்லியை மேற்கோள் காட்டி, வல்லுநர்கள் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ நெருங்குவதாக நம்பப்படுகிறது, பெரும்பாலான மாணவர்கள் முதுகலை படிப்பைத் தேர்வு செய்கிறார்கள், ஆனால் இளங்கலைக் கல்விக்கும் விண்ணப்பிக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சர்வதேச மாணவர்களுக்கான விசா எண்களை கனடாவும், ஆஸ்திரேலியாவும் அதிக அளவில் மட்டுப்படுத்தி வரும் நிலையில், இந்தியர்கள் மற்ற இடங்களைத் தேடுகிறார்கள். அதற்கமைய, அயர்லாந்து பயனடைந்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.





