வட அமெரிக்கா

கனடாவில் இந்தியப் பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொலை: கணவர் கைது

கனேடிய நகரமொன்றில் இந்திய வம்சாவளிப்பெண் ஒருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி, சம்பவ இடத்திலேயெ பரிதாபமாக பலியானார்.

10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து கனடா வந்தவர் பல்வீர் சிங் (57). பல்வீந்தரின் மனைவி குல்வந்த் கௌர் (46), தங்கள் மகனுக்கொரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக தன் பங்களிப்பைச் செய்வதற்காக தன் மகனுடன் 2019ஆம் ஆண்டு கனடா வந்துள்ளார். அவனுக்கு இப்போது 8 வயதாகிறது.

கனடா வந்த பிறகு, கணவனுக்கும் மனைவிக்குமிடையே அடிக்கடி சண்டை நடக்குமாம். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, அக்டோபர் 13ஆம் திகதி, பல்வீந்தர் தன் மனைவி குல்வந்தைக் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

கனேடிய நகரமொன்றில் இந்தியப் பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொலை: கணவர் கைது | Indian Woman Found With Injuries Canada

அவசர உதவிக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தும், குல்வந்தைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.மனைவியை கொடூரமாகக் குத்திக் கொன்றதற்காக பல்வீந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content