இலங்கை வந்த இந்திய பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) “கிரீன் சேனல்” வழியாக ரூ. 105 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” கஞ்சாவை கடத்த முயன்ற இந்திய பயணி இன்று (05) காலை விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இந்தியாவின் புது தில்லியில் உள்ள ஒரு காலணி கடையில் விற்பனையாளராக பணிபுரியும் 43 வயது இந்தியர் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து இந்த “குஷ்” போதைப்பொருளை கொள்வனவு செய்து , இந்தியாவின் புது தில்லிக்கு வந்து, அங்கிருந்து இன்று காலை 07.45 மணிக்கு ஏர் இந்தியா AI 277 விமானத்தில் BIA க்கு வந்தடைந்தார்.
சந்தேக நபர் தனது சாமான்களில் 10.750 கிலோகிராம் எடையுள்ள 19 “குஷ்” கஞ்சா பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க வருகை முனையத்தின் “கிரீன் சேனலில்” புதிதாக நிறுவப்பட்ட ஸ்கேனிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட முதல் சோதனை இதுவாகும்.
“குஷ்” கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்கவில் உள்ள BIA இல் உள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.