வட அமெரிக்கா

அமெரிக்காவில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய குடும்பம் – குடும்பத்தார் விடுத்துள்ள கோரிக்கை

அமெரிக்காவில் கர்நாடகாவைச் சேர்ந்த யோகேஷ் நாகராஜப்பா – பிரதீபா அமர்நாத் என்ற தம்பதியும் அவர்களது 6 வயது மகனும் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூவரது சடலங்களும் கடந்த சனிக்கிழமை மேரிலேண்ட் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனைவியையும் மகனையும் சுட்டுக் கொன்ற பின் யோகேஷ் நாகராஜப்பா தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் சம்பவம் நிகழ்ந்து மூன்று நாட்கள் ஆகியும் உடல்களைப் பெற முடியவில்லை எனவும் , மூவரின் உடல்களையும் இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யோகேஷின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!