விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இம்மாதம் இலங்கைக்கு வர இருப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா மற்றும் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சகங்களுக்கு இடையே உள்ள நிதி ஒத்துழைப்பில் தற்போதுள்ள கூட்டாண்மைகளை மதிப்பாய்வு செய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
எதிர்காலத்தில் பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்திற்கும் இது களம் அமைக்கிறதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
(Visited 11 times, 1 visits today)