பங்களாதேஷ் கிரிக்கெட் துறைக்கு பாரிய நிதியிழப்பு
இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான அரசியல் முறுகல் நிலை காரணமாக, பங்களாதேஷ் கிரிக்கெட் துறை பாரிய நிதி இழப்புகளைச் சந்தித்து வருகிறது.
குறிப்பாக, இந்தியாவின் முன்னணி விளையாட்டு உபகரண நிறுவனமான SG, பங்களாதேஷ் அணித்தலைவர் லிட்டன் தாஸ் (Litton Das) உள்ளிட்ட வீரர்களின் ஒப்பந்தங்களைப் புதுப்பிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
மற்றொரு நிறுவனமான Sareen Sports (SS), பங்களாதேஷில் தனது உற்பத்திகளை நிறுத்தியுள்ளதுடன், ஏற்கனவே பல வீரர்களின் ஒப்பந்தங்களையும் ரத்து செய்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவுடனான விநியோகச் சங்கிலி முடங்கியுள்ளதால், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளம்பர வருமானம் இன்றி வீரர்கள் தவித்து வருகின்றனர்.
முஸ்தாபிசுர் ரஹ்மான் (Mustafizur Rahman) ஐபிஎல் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பங்களாதேஷ் உலகக் கோப்பை போட்டிகளை இடமாற்றக் கோரியது இந்த விரிசலை அதிகப்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீரடைந்தால் மட்டுமே விளையாட்டுத்துறையில் நிலவும் இந்தத் தேக்கநிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





