இந்தியா இலங்கை உலகம் செய்தி

ஓன்டன்செட்ரான் ஊசி சர்ச்சை: சர்வதேச பரிசோதனைக்கான முழுச் செலவையும் ஏற்கத் தயார் – இந்திய நிறுவனம் அறிவிப்பு

இலங்கையில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட ‘ஓன்டன்செட்ரான்’ (Ondansetron) ஊசி மருந்துகளை, சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் பரிசோதிப்பதற்கான முழுச் செலவையும் ஏற்கத் தயாராக இருப்பதாக இந்திய நிறுவனமான மான் பார்மாசூட்டிக்கல்ஸ் அறிவித்துள்ளது.

இந்த மருந்தை ஏற்றிய பின்னர் இரண்டு நோயாளிகள் உயிரிழந்ததாக எழுந்த சந்தேகத்தை அடுத்து, அதன் நான்கு தொகுதிகளை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த மருந்துகள் உரிய வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்துவது இலங்கை அதிகாரிகளின் பொறுப்பு எனச் சுட்டிக்காட்டியுள்ள அந்த நிறுவனம், பக்கச்சார்பற்ற சர்வதேசப் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சை வலியுறுத்தியுள்ளது

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!