உலகம் செய்தி

ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய விருதை வென்ற இந்திய ராணுவ அதிகாரி

தெற்கு சூடானில்(South Sudan) உள்ள ஐக்கிய நாடுகள் சபையின்(UNMISS) பணியில் தற்போது பணியாற்றும் பெங்களூருவைச்(Bengaluru) சேர்ந்த இந்திய ராணுவ அதிகாரி மேஜர் சுவாதி சாந்த குமார்(Swati Shantha Kumar), பாலின உள்ளடக்கிய அமைதி காக்கும் பணியின் தனது பங்களிப்பிற்காக 2025ம் ஆண்டுக்கான மதிப்புமிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் விருதுக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்(António Guterres), 2025ம் ஆண்டிற்கான வெற்றியாளர்களை அறிவித்தார்.

மேலும், தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாலின உள்ளடக்கிய அணுகுமுறையை வலுப்படுத்தியதற்காக சுவாதியின் “சம பங்காளிகள், நீடித்த அமைதி” என்ற திட்டத்தைப் பாராட்டினார்.

ஐ.நா.வின் ஆணைக்கு ஏற்ப பாலின சமத்துவத்தையும் அமைதி காக்கும் பணிகளையும் ஊக்குவிக்கும் முயற்சிகளை இந்த விருது அங்கீகரிக்கிறது.

மேஜர் சுவாதியின் திட்டம் உலகளவில் உள்ள அனைத்து ஐ.நா. அமைதி காக்கும் பணிகள் மற்றும் ஐ.நா. நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளில் இருந்து பட்டியலிடப்பட்டது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!