இந்தியா இலங்கை செய்தி

இந்திய இராணுவத் தளபதி நாளை இலங்கை விஜயம்!

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி Upendra Dwivedi மூன்று நாட்கள் பயணமாக நாளை (05) இலங்கை வருகின்றார்.

இலங்கை இராணுவத்தினரால் மரியாதை அணிவகுப்புடன் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்படவுள்ளது.

இந்திய இராணுவத் தளபதியுடன் மேலும் சில உயர்மட்ட அதிகாரிகள் கொழும்பு வரவுள்ளனர். 8 ஆம் திகதிவரை அவர்கள் நாட்டில் தங்கி இருப்பார்கள்.

இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருடன் இந்திய இராணுவத் தளபதி பேச்சு நடத்துவார் என தெரியவருகின்றது.

அதேவேளை, ஜெனரல் திவேதி புத்தலவில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் உரை நிகழ்த்துவார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் அண்மையில் இலங்கை வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!