செய்தி வட அமெரிக்கா

FBI இயக்குநராக டிரம்ப்பால் பரிந்துரைக்கப்பட்ட இந்திய-அமெரிக்கர்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ்யப் என்கிற காஷ் படேலை அமெரிக்க புலனாய்வு நிறுவனமான FBIயின் இயக்குனராக நியமிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்திலுள்ள தனது அதிகாரப்பூர்வ கணக்கில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

மேலும், “காஷ்யப் படேல் FBIயின் அடுத்த இயக்குநராக நியமிக்கப்படுவார் என்பதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன். காஷ் ஒரு சிறந்த வழக்கறிஞர், புலனாய்வாளர் மற்றும் ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ (America First) என்பதை முக்கியமாக கருதும் ஒரு போராளி. அவர் தனது வாழ்க்கை முழுவதும் ஊழலை வெளிக்கொண்டுவதற்கும், நீதி மற்றும் அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்காகவும் அயராது பாடுபட்டுள்ளார்”, என்று டிரம்ப் பதிவிட்டிருந்தார்.

(Visited 48 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி