செய்தி விளையாட்டு

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அந்தவகையில், ஐந்தாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில்(Thiruvananthapuram) நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து 271 ஓட்டங்கள் குவித்தது.

இந்திய அணி சார்பில், இஷான் கிஷான்(Ishan Kishan) 103 ஓட்டங்களும் சூர்யகுமார் யாதவ்(Suryakumar Yadav) 63 ஓட்டங்களும் இறுதியில் அதிரடியாக விளையாடிய ஹர்டிக் பாண்டியா(Hardik Pandya) 42 ஓட்டங்களும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பில், பின் ஆலன்(Finn Allen) 80 ஓட்டங்களும் இஷ் சோதி(Ish Sodhi) 33 ஓட்டங்களும் குவித்தனர்.

மேலும், இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த இஷான் கிஷான் ஆட்ட நாயகன் விருதையும் தொடரின் நாயகன் விருதை சூர்யகுமார் யாதவும் கைப்பற்றியுள்ளனர்.

இறுதியில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது.

இதற்கு முன்னதாக இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!