இந்தியா, அமெரிக்கா, கொரியா தேர்தல் ஆபத்தில் -மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் தேர்தல்களை சீர்குலைக்கும் தயாரிப்புகள் குறித்து மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் உள்ளடக்கத்தை சீனா இந்த செயல்முறையை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் தைவான் ஜனாதிபதித் தேர்தலின் போது பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கடந்த மாதம் சந்தித்து கலந்துரையாடினார்.
சீனாவால் ஆதரிக்கப்படும் சைபர் குழுக்கள் பற்றிய தகவலையும் வழங்கும் நிறுவனம் இந்த தகவலை வழங்கியுள்ளது.





