இந்தியா – தென்காசியில் இடம்பெற்ற கோர விபத்து : அறுவர் பலி!

இந்தியாவின் தமிழ்நாட்டின் தென்காசியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (28.01) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காரும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் கார் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த 06 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 11 times, 1 visits today)