இந்தியா

இந்தியா – பயணப்பெட்டிக்குள் மறைந்தபடி மாணவர் விடுதிக்குள் செல்ல முயன்ற மாணவி

பயணப்பெட்டிக்குள் மறைந்தபடி மாணவர்களின் விடுதிக்குள் செல்ல முயன்ற மாணவி ஒருவர் பிடிபட்டார்.இச்சம்பவம் இந்தியாவின் ஹரியானா மாநிலம், சோனிபட் நகரிலுள்ள ஓ பி ஜிண்டால் அனைத்துலகப் பல்கலைக்கழகத்தில் நடந்தது.

அண்மையில் நடந்த இச்சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் பரவி வருகிறது. விடுதிக் காவலர்கள் அந்தப் பயணப்பெட்டியைத் திறப்பதும் அதனுள் மாணவி ஒருவர் மறைந்திருப்பதும் அதில் தெரிகிறது.

மாணவிகளில் ஒருவரே அதனைத் தம் கைப்பேசியில் பதிவுசெய்து வெளியிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அந்தப் பயணப்பெட்டிக்குள் மாணவி ஒருவர் இருப்பதை விடுதிக் காவலர்கள் அல்லது பல்கலைக்கழக அதிகாரிகள் எப்படிக் கண்டுபிடித்தனர் என்பது தெரியவில்லை. ஆனால், மாணவியின் திட்டம் பலிக்கவில்லை என்பது மட்டும் உறுதியானது.

இதுகுறித்துக் கருத்துரைத்த பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி, “எங்கள் மாணவர்கள் குறும்புக்காரர்கள். ஆயினும், பாதுகாப்பு வலுவாக இருப்பதால் அம்மாணவி பிடிபட்டுவிட்டார். இது ஒன்றும் பெரிய விஷயமன்று. இதன் தொடர்பில் எவரும் புகாரளிக்கவில்லை,” என்றார்.

அம்மாணவிமீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே