இந்தியா

இந்தியா- பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஐவர் பலி

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 29 பேர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் பஞ்சாப் மாநிலத்தின், ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள சிங்கேவாலா கிராமத்தில் வியாழக்கிழமை (மே 29) நள்ளிரவில் நிகழ்ந்தது.

விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரும் புலம்பெயர் தொழிலாளர்கள் எனத் தெரியவந்துள்ளது.

வியாழக்கிழமை நள்ளிரவு ஏறக்குறைய ஒரு மணியளவில் அந்தப் பட்டாசு ஆலையில் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. இதையடுத்து, ஆலை முழுவதும் மளமளவென தீ பரவியது.

பின்னர் கட்டடம் முற்றிலும் இடிந்து விழுந்து தரைமட்டமானது என்றும் அதன் இடிபாடுகளில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் காவல்துறை தெரிவித்தது.

மீட்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (மே 30) பிற்பகல் வரை நீடித்தது. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

காயமடைந்த அனைவரும் பதிண்டா மற்றும் முக்த்சரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!