இந்தியா

இந்தியா – மணிப்பூரில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்த முயற்சி ; 10 பேரைக் கொன்ற பாதுபாப்பு அதிகாரிகள்

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் காவல் நிலையம் ஒன்றின்மீது தாக்குதல் நடத்த முயன்ற பத்து பேரைப் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.இந்தச் சம்பவம் நவம்பர் 11ஆம் திகதியன்று நிகழ்ந்தது.

ஆயுதம் ஏந்திய அந்தப் பத்து பேருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மணிப்பூரில் உள்ள குக்கிஸ் சமூகத்துக்கு வழங்கப்படும் சிறப்புப் பொருளியல் சலுகைகள், அரசாங்க வேலை, கல்வி தொடர்பான சலுகைகள் மெய்ட்டிஸ் சமூகத்துக்கும் வழங்கப்பட வேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டதிலிருந்து அம்மாநிலத்தில் வன்முறை வெடித்துள்ளது.

இதில் குறைந்தது 250 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 60,000 பேர் தங்கள் வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை இழந்து தவிக்கின்றனர்.

இந்நிலையில், நவம்பர் 11ஆம் திஇகதியன்று ஆயுதம் ஏந்திய போராளிகள் தாக்குதல் நடத்தியதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்தது.

அவர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாநிலக் காவல்துறையினருக்கும் இடையே மிகக் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.துப்பாக்கிச் சண்டை ஏறத்தாழ 45 நிமிடங்களுக்கு நீடித்ததாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்ததாகப் பெயர் குறிப்பிட விரும்பாத மணிப்பூர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

(Visited 39 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே