செய்தி விளையாட்டு

ஆஸ்திரேலிய தொடருக்கான ஒருநாள் மற்றும் T20 அணிகளை அறிவித்த இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாட உள்ளது.

முதலில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒருநாள் தொடர் அக்டோபர் 19ம் திகதி ஆரம்பிக்க உள்ளது. அதனை தொடர்ந்து அக்டோபர் 29ம் திகதி T20 தொடர் ஆரம்பமாகவுள்ளது.

மேலும், ஒருநாள் தொடருக்காக T20 மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்று நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணியில் உள்ளனர்.

இந்நிலையில், ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் தலைமையிலும் T20 தொடர் சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி – சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல் , நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

T20 போட்டிக்கான இந்திய அணி – சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் ஷர்மா, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!