இந்தியா

இந்தியா: காவிரி ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்களும் சடலமாக மீட்பு

காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தீயணைப்பு வீரர்கள் இரவு வரை தேடியும் நீரில் மூழ்கிய மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று காலை தேடும் பணி தொடங்கியது.

நேற்று காலை 7.05 மணியளவில் அதே பகுதியில் மணலில் சிக்கியிருந்த ஜாகிர்உசேனின் உடல் மீட்கப்பட்டது.

இதையடுத்து மற்ற 2 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

மாலை 3.30 மணியளவில் சிம்புவின் உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து மற்றொரு மாணவரான விக்னேஷின் உடலை தேடி வந்தனர்.

மாணவரை தேடுவதற்கு வசதியாக முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து தேடுதல் பணி நடந்த நிலையில் இரவு 10 மணியளவில் விக்னேஷின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

 

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!