இலங்கையில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்!
																																		பொரளை குறுக்கு வீதி பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் இன்று (22) துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த இடத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்கள், T-56 துப்பாக்கியை பயன்படுத்தி வீட்டின் வாயிலை நோக்கி இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீடு பிரபல காலணி நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனருக்கு சொந்தமானது எனக் குறிப்பிட்டுள்ள பொலிஸார், விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை இலங்கையில் அண்மைக்காலமாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)
                                    
        



                        
                            
