இலங்கை செய்தி

அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் – டிஐஜியை நியமிக்க தீர்மானம்!

சைபர் குற்றங்கள் தொடர்பாக  சுமார் 25 முறைப்பாடுகள் தினமும் பதிவாகுவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (20)  பங்கேற்று உரையாற்றும் போது அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பெரும்பாலான முறைப்பாடுகள் வடக்கு மாகாணத்தில் இருந்து பதிவாகுவதாக தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 24 சைபர் குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும், அதைத் தொடர்ந்து 2021 இல் 577 முறைப்பாடுகளும், 2022 இல் 654 முறைப்பாடுகளும், 2023 இல் 472 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

அதேநேரம் கடந்த வருடத்தில்  (2024)   1,539 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்,  2025 அக்டோபர் 31 வரை 2,368 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

நாட்டின் பல மாவட்டங்களில் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) கீழ் கணினி குற்றப் புலனாய்வு துணைப் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் இலங்கை காவல்துறை விரைவில் சைபர் குற்றங்களுக்குப் பொறுப்பான ஒரு டிஐஜியை நியமிக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!