செய்தி

உலக அளவில் சீனியின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு

உலக அளவில் சீனியின் விலை பாரிய அளவுக்கு அதிகரித்துள்ளது.

கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. El Nino பருவநிலை மாற்றத்தால் இந்தியா, தாய்லந்து போன்ற நாடுகளில் சீனி உற்பத்தி குறைந்துள்ளதே அதற்குக் காரணம் என்று உணவு, வேளாண்மை நிறுவனம் தெரிவித்தது.

உலகில் உணவுப் பொருள்களின் விலை கடந்த மாதம் (செப்டம்பர் 2023) சீராக இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டம்பரில் சீனியின் விலைக் குறியீடு 9.8 விழுக்காடு உயர்ந்ததாக நிறுவனம் கூறியது.

2010ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான ஆக அதிக சதவீதம் அதிகமாகும். அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் சீனி விலை உயரக் காரணம் என்று நிறுவனம் கூறியது.

சராசரியாக 2 முதல் 7 ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படும் El Nino பருவநிலை மாற்றம் 12 மாதங்கள் வரை நீடிக்கக்கூடியது. தற்போதைய El Nino பருவநிலை மாற்றம் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது.

இப்பருவநிலை மாற்றத்தால் மத்திய, கிழக்கு வெப்பமண்டலப் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பமடையும். மழைப்பொழிவு குறையும். நிலம் வறண்டு கரும்பு விளைச்சல் பாதிக்கப்படும்.

(Visited 12 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content