ஐரோப்பா

பாரிஸில் Eiffel கோபுரத்தை பார்வையிடுவதற்கான கட்டணம் அதிகரிப்பு

பாரிஸிலில் அமைந்துள்ள Eiffel கோபுரத்தை பார்வையிடுவதற்கு பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 17 ஆம் திகதியிலிருந்து புதிய கட்டணம் நடப்புக்கு வரும் நிலையில் Eiffel கோபுரத்தை பார்வையிடுவதற்கு தற்போது கட்டணம் 29.40 யூரோவில் இருந்து 35.30 யூரோவுக்கு உயர்த்தப்படும்.

பாரிஸ் நகர மன்றம் நுழைவுச்சீட்டு கட்டணத்தை உயர்த்த ஒப்புதல் அளித்தது. கோபுரத்தில் மேற்கொள்ளப்படும் அவசரச் சீரமைப்புப் பணிகளுக்கான செலவைச் சமாளிக்க கட்டண உயர்வின் மூலம் கிடைக்கும் தொகை உதவும் என குறிப்பிடப்படுகின்றது.

19 கொரோனா தொற்றின்போது கோபுரத்தை பார்வையிட சென்ற சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. அதனால் கோபுர நிர்வாகத்துக்கு 120 மில்லியன் யூரோ பற்றாக்குறை ஏற்பட்டது.

புதிதாக சீரமைப்புப் பணிகளுக்கு 60 மில்லியன் யூரோ போதாது என்று கூறப்பட்ட நிலையில் நுழைவுக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்