சிங்கப்பூரில் 43 பூனைகளுக்கு நேர்ந்த கொடூரம்

சிங்கப்பூரில் வீட்டில் வளர்த்த 43 பூனைகளுக்கு உணவு அளிக்கத் தவறிய நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முகமது டனியல் சுகிர்மான் என்ற நபர் பூனைகளுக்கு 3 மாதங்களாக உணவு வழங்கப்படவில்லை.
அங் மோ கியோ அவென்யூ 6இல் உள்ள கழக வீட்டில் இருந்த பூனைகளில் 2 மடிந்தன.
வீட்டில் பூனைகள் மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்தன என்றும் அவற்றுக்குப் போதுமான தண்ணீரும் உணவும் அளிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
விலங்குநல மருத்துவச் சேவைப் பிரிவுக்குச் செல்லும்படி 2022ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி டனியலுக்கு உத்தரவிடப்பட்டது. அவர் உத்தரவைப் புறக்கணித்தார்.
விலங்குகளை அநாவசியமாகத் துன்புறுத்தியதாகக் குறிப்பிடும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவருக்கு 18 மாதங்கள் வரை சிறைத்தண்டனையோ 15,000 வெள்ளி வரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
(Visited 61 times, 1 visits today)