பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கு கடிதம் எழுதிய இம்ரான் கான்

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், ராணுவத் தளபதி சையத் அசிம் முனிருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே “வளர்ந்து வரும் இடைவெளி”க்கான காரணங்களை அந்த கடிதத்தில் இம்ரான் கான் விளக்கியுள்ளார். PTI தலைவர் வழக்கறிஞர் கோஹர் அலி கான் இந்த கடிதத்தை உறுதிப்படுத்தினார்.
PTI தலைமையின் கூற்றுப்படி, இந்தக் கடிதம், முக்கிய தேசிய கவலைகளை எடுத்துரைக்கிறது மற்றும் மக்களுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையிலான ஒற்றுமையை வலியுறுத்துகிறது.
ஊடகங்களுக்கு பேட்டி அளித்த வழக்கறிஞர் கோஹர், முன்னாள் பிரதமராக இம்ரான் கான் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாகவும், பாகிஸ்தான் ஆயுதப் படைகள் செய்த தியாகங்களைப் பாராட்டியதாகவும் குறிப்பிட்டார்.
(Visited 11 times, 1 visits today)