இலங்கை

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் மூலம் வர்த்தகர்களுக்கு கிடைத்த பாரிய இலாபம்!

2023ஆம் ஆண்டு இலங்கைக்கு வெங்காயத்தை இறக்குமதி செய்த வர்த்தகர்கள் சுமார் 8,000 கோடி ரூபாவை சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியுள்ளதாக வழிவகைகள் குழுவில் தெரியவந்துள்ளது.

அந்தக் குழுவின் தலைவர்  பாட்டலி சம்பிக்க ரணவக்க இது தொடர்பான அறிக்கைகளை இன்று (01.04) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உண்மைகளை தெளிவுபடுத்தினார்.

இதேவேளை, இலங்கை சுங்கம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் கலால் திணைக்களம் என்பன அரசாங்கத்திற்கு  1,066 ரூபாய் வரிகள் வசூலிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்திய 4,479 பேரிடம் உரிய வரி வருமானத்தை வசூலிக்காமல், நாட்டின் ஒட்டுமொத்த மக்களிடமிருந்தும் பால் மா, சீனி, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு VAT வரி விதிப்பது நியாயமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!