இலங்கை செய்தி

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்

ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களின் எண்ணிக்கை 06 என முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அரசாங்கத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட எழுத்துமூல பணிப்புரையின் பிரகாரம், ஆறு உத்தியோகபூர்வ வாகனங்களில் அம்புலன்ஸ் உட்பட மூன்று உத்தியோகபூர்வ வாகனங்களை திங்கட்கிழமை கையளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரச புலனாய்வு சேவைகள் வெளியிட்டுள்ள பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின்படி, இலங்கையில் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளான அரசியல்வாதி மஹிந்த ராஜபக்ஷ என்ற அரசியல்வாதி ஆவார்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே குறித்த உத்தியோகபூர்வ வாகனங்கள் அவரது பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!