ஐரோப்பா

கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பில் உக்ரைன் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தை டிசம்பர் 25ஆம் திகதிக்கு மாற்றுவதற்கு உக்ரைன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கான சட்டமூலத்தில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார்.

உக்ரைனும் ரஷ்யாவும் பாரம்பரியமாக ஜனவரி 7ஆம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடின.

ரஷ்யாவின் பாரம்பரியத்தைக் கைவிடவும் உக்ரைனுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளவும் புதிய சட்டம் முன்மொழியப்பட்டதாகக் கூறப்பட்டது.

குறைந்தது 17ஆம் நூற்றாண்டிலிருந்து உக்ரேன் மொஸ்கோ தேவாலயத்தின் தலைமைத்துவத்தைப் பின்பற்றியது.

ஆனால் 2019ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனின் ஓர் அங்கமாக இருந்த கிரீமியாவை ஆக்கிரமித்தபின் உக்ரைனின் பழைமைவாத தேவாலயம் அந்த உறவை முறித்துக்கொண்டது.

கடந்த ஆண்டு மக்கள் டிசம்பர் 25ஆம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்ட உக்ரைனின் பழைமைவாத தேவாலயம் அனுமதித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!