செய்தி

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

இஸ்ரேலில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைபாவிற்கு அருகில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

தாக்குதல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, வழங்கப்படும் அறிவுறுத்தல்களை உரியவாறு பின்பற்றுமாறு இலங்கையர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

ஹைபாவிற்கு தெற்கே 20 மைல் தொலைவில் அமைந்துள்ள இராணுவ தளத்தை இலக்கு வைத்து ஹெஸ்புல்லா அமைப்பினரால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதில் 4 இராணுவ சிப்பாய்கள் உயிரிழந்ததுடன் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகச் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

(Visited 2 times, 2 visits today)
See also  சவுத் ஹாரோவில் இரண்டு திருட்டுச் சம்பவங்கள்: பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content