இலங்கை

இலங்கையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட தாக்கம் : 09 மரணங்கள் பதிவு!

ஒரு மாதத்திற்குள் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய வெள்ள நிலைமையை கருத்திற்கொண்டே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் 09 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ள போதிலும், அதிக தொற்றுநோய்க்கு பரவுவதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன தெரிவித்தார்.

வெள்ள நிலைமை தணிந்துள்ள போதிலும் வயிற்றுப்போக்கு மற்றும் எலிக்காய்ச்சல் அபாயம் இன்னும் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் திரு.உபுல் ரோஹன தெரிவித்தார்.

(Visited 28 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்