இலங்கை

வடமாகாணத்திற்கு விஜயம் செய்த ஐ.எம்.எஃப் குழுவினர் : ஆளுநருடன் சந்திப்பு!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட குழுவொன்று வடமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளது.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில், வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸைச் சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வடமாகாணத்தின் தற்போதைய மக்களின் வாழ்க்கை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

வடமாகாணத்தில் வாழும் மக்களின் பொருளாதார வலுவூட்டல், பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு அமுல்படுத்தக் கூடிய முன்மொழிவுகள் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பொருளாதார ரீதியில் வலுவூட்டும் வகையில் அரசாங்கம் தற்போது திட்டமிட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்