இலங்கை செய்தி

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி – மீனவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 4 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 03 மாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவர்களுடன் கைதான மேலும் 9 பேரில் இருவருக்கு 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கைதான 9 பேரில் 07 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 01 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 28 ஆம் திகதியும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதியும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான மீனவர்களுக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவளை நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் ஜனவரி 20 ஆம் திகதி கைதான 7 மீனவர்களின் விளக்கமறியல் காலம் இம்மாதம் 17 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதுடன் ஜனவரி0 2 ஆம் திகதி கைதான 11 மீனவர்களின் விளக்கமறியல் காலம் இம்மாதம் 13 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!