இலங்கை

சட்டவிரோதமாக கடலட்டை பிடிப்பு – மன்னாரை சேர்ந்த மூவர் யாழில் கடற்படையினரால் கைது

மன்னாரை சேர்ந்த மூவர் யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று புதன் (27) இரவு நேரத்தில் சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த நிலையில் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடமைகளுடன் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது.

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கடல் பகுதிகளில் இரவு நேரத்தில் பல படகுகள் சட்டவிரோதமாக கடலட்டை பிடிப்பதாக கடற்படையினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள அதேநேரம் பல படகுகள் தடை செய்யப்பட்ட கடலட்டை தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்