இலங்கை

முட்டைகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பினால் சட்டநடவடிக்கை!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படும் முட்டைகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் செயற்கையாக தயாரிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் சுமார் நூறு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த முட்டைகள் தொடர்பில் எந்தவொரு முறைப்பாடும் செய்யப்படவில்லை எனவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர்  ஆசிறி வணிகசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள ஆய்வகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர் இலங்கையிலும் பரிசோதனை செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தொடர்பில் நுகர்வோர் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content