ஐரோப்பா

ஐஸ்லாந்தில் எரிமலைகள் வெடிப்பு :வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் வீடுகளுக்குச் செல்ல அனுமதி

நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட ஐஸ்லாந்திய நகரத்தில் வசிப்பவர்கள், உடமைகளைச் சேகரிக்க தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த புதன் மற்றும் வியாழன் என இரு தினங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் 1400 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய நாட்களிலும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டில் அவசரநிலையை அறிவித்துள்ளது

வட அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தில் 33 சீறும் எரிமலைகள் உள்ளன. எரிமலைகள் வெடிப்பதற்கு முன் அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகும். இந்நிலையில் ஐஸ்லாந்தின் தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ச்சியாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

திங்கள்கிழமை 500க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்து தென்மேற்கில் சுமார் 3 கி.மீ. தொலைவில் கிரிண்டாவிக் என்ற கிராமம் உள்ளது. கிரின்டாவிக் நகரத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், . இந்த கிராமத்தில் இருந்து வடக்கு மற்றும் தெற்கு நோக்கி செல்லும் சாலைகள் சேதம் அடைந்ததால் அந்த சாலைகளை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

See also  இங்கிலாந்தில் -10C ஆக குறையும் வெப்பநிலை : சில பகுதிகளில் உறைபனிக்கு வாய்ப்பு!

நிலநடுக்கம் காரணமாக ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான ப்ளூ லாகூன் நவம்பர் 16-ம் வரை மூடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content