வட அமெரிக்கா

அடுத்த வாரம் அமெரிக்கா வரும் பிரதமர் மோடியைச் சந்திப்பேன்: டொனால்ட் டிரம்ப்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த வாரம் தம்மைச் சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபரான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப், வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக்கூடும் என்ற நிலை எழுந்துள்ளது. இந்நிலையில் மோடியின் சந்திப்பு இடம்பெறவிருக்கிறது.

“மோடி அடுத்த வாரம் என்னைச் சந்திக்கவுள்ளார். மோடி மிகச் சிறந்தவர்,” என்று மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஃபிலின்ட் நகரில் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் டிரம்ப் தெரிவித்தார். தடையற்ற வர்த்தகம், அமெரிக்கர்களின் வேலைகளைப் பாதுகாப்பது ஆகியவற்றின் தொடர்பில் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது டிரம்ப் அந்த விவரத்தை வெளியிட்டார்.

இதுகுறித்து முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு டிரம்ப் தரப்பிலிருந்து யாரும் பதிலளிக்கவில்லை.

மோடி, அமெரிக்காவின் வில்மிங்டன் நகரில் நடைபெறவுள்ள குவாட் கூட்டமைப்புச் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு இந்த வார இறுதியில் அமெரிக்கா செல்வார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அக்கூட்டத்தை வழிநடத்துவார்.

மோடி, செப்டம்பர் 23ஆம் தகதியன்று நியூயார்க்கில் நடக்கவுள்ள ஐக்கிய நாட்டுப் பொதுச் சபையில் அங்கம் வகிக்கும் சந்திப்பு ஒன்றில் உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

(Visited 29 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
Skip to content