அரசியல் இலங்கை செய்தி

மகாபாரத அர்ச்சுனனே நான்: அர்ச்சுனா எம்.பி. கருத்து!

“மகாபாரதத்தில் வரும் பஞ்சபாண்டவர்கள்போலவே எனது குடும்பத்திலும் ஐந்து ஆண் பிள்ளைகள். அதனால்தான் எனக்கு அர்ச்சுனா என பெயர் வைத்தனர்.”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா Ramanathan Arjuna தெரிவித்தார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு (02) ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“எனது தந்தை இலங்கை சுங்கத்திலும், இலங்கை பொலிஸிலும் சேவையாற்றியவர். இலங்கை பொலிஸ் கால்பந்தாட்ட அணியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

கறுப்பு ஜுலைக்கு பின்னரே அவர் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டார். புலிகளின் பொலிஸ் துறையில் இரண்டாவது பதவி நிலையில் இருந்தார்.

2009 ஆம் ஆண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு இன்னும் உள்ளது.

எனக்கு நான்கு அண்ணன்மார் உள்ளனர். இருவர் வெளிநாட்டில் வசிக்கின்றனர். ஏனைய இருவர் இங்குள்ளனர். நான் ஐந்தாவது பிள்ளை.

மகாபாரதத்தில் ஐந்து சகோதரர்கள்போல் இருந்ததால்தான் எனக்கு அர்ச்சுனா என்ற பெயர் வைத்தனர்.” -என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!