ஐரோப்பா

மில்டன் சூறாவளி எதிரொலி : 23 விமான சேவைகள் இரத்து!

மில்டன் சூறாவளி காரணமாக இங்கிலாந்தில் இருந்து புளோரிடாவிற்கு பயணிக்கும் 23 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மில்டன் சூறாவளியால் ஏற்படும் பாதகமான வானிலை காரணமாக, புளோரிடாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

துரதிருஷ்டவசமாக, இது விர்ஜின் அட்லாண்டிக்கின் விமான அட்டவணையை பாதித்துள்ளது, மேலும் ஆர்லாண்டோ மற்றும் தம்பாவிற்குச் செல்லும் விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக விர்ஜின் அட்லாண்டிக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை UK ஏர்லைன்ஸ் விமானங்கள் குறைக்கப்பட்டுள்ளனதுடன், தம்பா, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் ஆர்லாண்டோவில் உள்ள விமான நிலையங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மில்டன் புயல் ஹெலீன் சூறாவளியை விட சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. 165 மைல் வேகத்தில் காற்று வீசும் எனவும் 10-15 அடி அல்லது அதற்கு மேல் புயல் வீசும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!