அரசு கட்டிடங்களில் LGBTQ சின்னங்களுக்கு தடை விதித்த ஹங்கேரி

30வது புடாபெஸ்ட் பிரைட் திருவிழா முறையாகத் தொடங்குவதற்குக்கு முன்பு, ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன், அரசு கட்டிடங்களில் பாலியல் சிறுபான்மையினரைக் “குறிக்கும் அல்லது ஊக்குவிக்கும்” சின்னங்களைக் காட்சிப்படுத்துவதைத் தடை செய்துள்ளார்.
தேசியவாதத் தலைவர் பல ஆண்டுகளாக “குழந்தை பாதுகாப்பு” என்ற பெயரில் LGBTQ உரிமைகளைத் திரும்பப் பெற்று வருகிறார், மேலும் இந்த ஆண்டு அவரது ஆளும் கூட்டணி வருடாந்திர பிரைட் அணிவகுப்பைத் தடுக்கும் நோக்கில் சட்ட மாற்றங்களை ஏற்றுக்கொண்டது.
இந்த அணிவகுப்பு வாரக்கணக்கான புடாபெஸ்ட் பிரைட் விழாவின் உச்சக்கட்டமாகும், மேலும் இந்த ஆண்டு தடை அச்சுறுத்தல் இருந்தபோதிலும், ஜூன் 28 அன்று நடைபெற உள்ளது.
ஓர்பன் கையெழுத்திட்டுஅரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆணையில், அரசாங்கம் அல்லது மத்திய வங்கியுடன் இணைக்கப்பட்ட “வெவ்வேறு பாலியல் மற்றும் பாலின நோக்குநிலைகள் அல்லது அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இயக்கங்களைக் குறிக்கும் அல்லது ஊக்குவிக்கும் சின்னங்கள் கட்டிடங்களில் வைக்கப்படக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.