இலங்கை

புலம் பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு கிடைத்த பாரிய வருமானம்!

ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களால் நாட்டிற்கு 499.02 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு தொழிலாளர்களால் நாட்டிற்கு  3862.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்,   74.4 சதவீத வளர்ச்சியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், செப்டம்பர் தொடக்கத்தில், 2023 இல் வெளிநாட்டு வேலைகளுக்காக பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!