மத்திய கிழக்கு

காஸாவில் பரிதாப நிலை – தொலைபேசியை சார்ஜ் செய்ய சூரிய சக்தியை நாடும் மக்கள்

காஸாவில் போருக்கு நடுவே கையடக்கதொலைபேசிகளுக்கு சார்ஜ் செய்வது  சவாலாகியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தாரைப் பற்றித் தெரிந்துகொள்ள தங்களுக்கு கையடக்க தொலைபேசி மிகவும் முக்கியமான விடயமாகியுள்ளதென குறிப்பிட்டுள்ளனர.

மேலும், உணவு, தண்ணீர் போன்றவை எங்கு கிடைக்கும், இருண்ட கூடாரங்கள், சாலைகளில் செல்லும் போது வெளிச்சத்தைப் பெற போன்ற வெவ்வேறு காரணங்களுக்குக் கைத்தொலைபேசி தேவைப்படுவதாகக் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்

அதற்காக அவர்கள் செல்வது ராஃபாவில் (Rafah) உள்ள எமிராட்டி (Emirati) மருத்துவமனைக்கு செல்வதாகவும் மருத்துவமனைக்கு வெளியே  கைத்தொலைபேசிக்கு இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எரிபொருள் இருந்தால் மின்சாரம் வழி சார்ஜ் செய்யலாம். இல்லையென்றால் சூரியத்தகடுகள் வழி சார்ஜ் செய்யலாம். சூரியத்தகடுகள் இருக்கும் சில வீடுகள் அல்லது கடைகள் வெளி ஆட்கள் கைத்தொலைபேசியை சார்ஜ் செய்ய அனுமதிக்கின்றன.  ஆனால் அதற்குக் கட்டணம் விதிக்கின்றன.

பலரால் அந்தக் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. கைத்தொலைபேசியை 100 சதவீதம் வரை சார்ஜ் செய்வது முடியாத காரியமாகும். அதிகபட்சம் 70 சதவீதம் செய்தால் பெரும் காரியம் என குறிப்பிட்டுள்ளனர்.

 

 

(Visited 10 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content