உலகம் செய்தி

ஜப்பானில் பற்றி எரிந்த வீடுகள் – 170 பேர் வெளியேற்றம்!

ஜப்பானில் உள்ள ஓய்டா (Oita) நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் வசித்து வந்த 170 பேர்  இன்று பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும், 70 வயதுடைய நபர் ஒருவரை காணவில்லை எனவும் ஜப்பானின் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்றின் காரணமாக தீ வேகமாக பரவியதாக கூறப்படுவதுடன், 20 மணிநேர  போராட்டத்தை தொடர்ந்து தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!